ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பாங்க் பஞ்சாபஸய்யர் கிருஹத்தில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் கடந்த பிப்ரவரி 25 தொடங்கி மார்ச் 4ந்தேதி வரை நடைபெற்றது. பிப்- 25 அன்று கடஸ்தாபணம், மஹாத்மியம் தொடங்கி பின் வந்த 7 நாட்களில் மூலபாராயணம், கதை, அஷ்டபதி என்று ஊர்மக்களின் உற்சாகத்துடன் வெகு விமரிசையாக நடந்தது.

நம் மெம்பர் வெங்கட் ஸ்வாமி (டல்லாஸ் – அமெரிக்கா, மாப்படி நாணு), தினந்தோறும், மூல பாராயணம், கதை, செய்வித்தார். மகளிர் மன்றம் மூலம் அஷ்டபதிகள் நடைபெற்றன.

தேதியூர் வா.நாராயணன் பூஜைகள் செய்வித்தும் மூலபாராயணங்களில் பங்கேற்றுகொண்டும் நிறைவு செய்தார். பூர்த்தியன்று ஆனந்ததாண்டவபுரம் ஸ்ரீ ம.ராஜாராமன் பாராட்டுரை வழங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஊக்குவித்தார்.